தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிளை சார்பாக கடந்த 18-03-2011 அன்று வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகைக்குப் பின் ஓடாவி தெருவிலும் கிழக்குத் தெருவிலும் இணை வைத்தலுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் வீடு வீடா சென்று இணைவைத்தலை விளக்கி தகடு-தாயத்து-சோத்துக்கற்றாலை- எலுமிச்சங்காய்-தகடுகள் போன்றவைகள் கஷ்டங்களை போக்காது, அல்லாஹ் தான் நன்மை-தீமைகளை தருவான் என்பதை தெளிவுபடுத்தி அவர்களின் அனுமதியோடு வீடுகளில் தொங்க விடப்பட்ட அவைகள் அறுத்தெரியப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!